நேரெதிர் ( நேர்-எதிர் )
காட்சி - 1 ரகுபதி வீட்டில்
காட்சி - 1 ரகுபதி வீட்டில்
என்ன சீனு போறானா ...?
தெரியலீங்க சிடுசிடுன்னு விழுவான் கேட்டா !
நீ தான ரேணுகா சொன்னே "அவன் பீல் பண்றான்" வேல கிடைச்சா தேவலனு சொல்றான் .., இன்னும் என்னென்னமோலாம் .., இப்போ இந்த வேலைக்கு என்னவாம்?
அதோ வரான் அவனையே கேளுங்க .
சீனு , நா குமார் கிட்ட பேசிட்டேன் நீ போயிட்டு ஜாயின் பன்னிக்கோ பார் டைம் பீயிங்
அதெல்லாம் சரி வராதுப்பா, உன்ன யாரு பேசச்சொன்னது ? ஆபிஸ் ஆ அது ? பலசரக்கு மண்டி மாதிரி ..
நீ என்ன லேபிள் ஒட்டப் போறியா ? , இல்ல வெயிட் போட போறியா ? உனக்கு ஏர் கண்டிஷனெட் ரூம்ல அகௌண்ட்ஸ் என்ட்ரி வேல , அதுவும் நீ படிச்ச எம்.காம் க்கு ஏத்த மாதிரி .. .
ஐயோ அப்பா ... ப்ளீஸ் எட்டாயிருவாய்க்கு பூந்தமல்லிக்கு போயி.. ,அதுவும் அங்க முடியாது !!
என்னடா பேசற ஆவடிலேந்து பூந்தமல்லி போகமுடியாதா ? ,அப்பொறம் 200 ஸீஸீ பைக் என்னத்துக்கு வெச்சுருக்க?
உன் வேலையப்பாருப்பா , சும்மா நொய் நோய்னு நச்சரிச்சிகிட்டு..சேச்சே..
இப்போ அப்பா என்ன சொல்லிட்டாருனு இவோலோ கோவமா களம்பரே.. ?
எங்கயோ போறேன் ஆள விடும்மா. ( பைக்கில் ஏறி பறந்தான் )
பாத்தியாடி உன்புள்ளய ! , என்ன ஐடியாள இருக்கான்னே புரியல ..
சரி விடுங்க எல்லாம் சரியாயிரும் !
இன்னும் மூணே வருஷம் தான் எனக்கு சர்விஸ் ... அதுக்குள்ள சரியாகணும் !
காட்சி -2 நண்பர்கள் மத்தியில்
விட்றா அப்பா திட்றதுக்கெல்லாம் பீல் பண்ணாத டா .. மொத மொத "மேகா" வ எப்போ பாத்த ? எப்பிடி உங்க "லவ்" ஸ்டார்ட் ஆச்சு சொல்றா .
டேய் .. போங்க டா..
பார்றா மச்சான் வெக்க படறான் !!
" அவள 2 - 3 தடவ காலேஜ்ல பாத்துருக்கேன் , அப்போல்லாம் எனக்கு எதுவும் தோணல ..ஆனா போன நவராத்திரினு நினைக்கிறேன் அம்மா கூட மாங்காடு கோவில் போயிருந்தேன் வழக்கம் போல அவங்க அடி பிரதக்ஷணம் பண்ண போய்ட்டாங்க " ...
அப்பொறம் ... , சீக்கரம் சொல்லுடா இப்பிடி சொன்னா நாளைக்கு ஆயிரும்!!
எனக்கு இப்பிடி தான் சொல்ல வரும் , இஷ்டம்னா கேளுங்க இல்லாட்டி விடுங்க டா.
நீ சொல்லு சீனு , சும்மா இரு கிருஷ்ணா !
" அப்போ "ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் கோடி வேண்டாமோ"ங்கிற பாட்டுக்கு மின்னல் மாதிரி நிக்காம அபிநயம் பிடிச்சா "மேகா" , அந்த கண்ணு , முக பாவம் , முத்திரை , நிறுத்தம்னு பிச்சு ஒதறினா , ஆனந்த தாண்டவம் , ஊர்த்வ தாண்டவம்னு அப்புடியே பல கட்டத்துக்குபோய் திக்குமுக்காட வெச்சா ..."
என்ன டா இவன் என்னென்னமோ பேசறான்...!
விடு குமார் அப்புடியே கண்டின்னு பண்ணட்டும் , என்னதான் சொல்றான்னு பாப்போம்.
"அவ ஆடிமுடிச்ச அப்பொறம் தான் எனக்கு சுயநினைப்பே வந்துச்சு , அன்னிக்கு என்னோட கண்ணுக்குள்ள எறங்கி மனசுல நிலைச்சுட்டாடா"
எப்பா சாமி ஆலவிடு , தெரியாம கேட்டுட்டோம்...
என்னடா இப்புடி அல
ர்றீங்க , அப்புடி என்ன சொன்னான் சீனு.
ர்றீங்க , அப்புடி என்ன சொன்னான் சீனு.
வாடா பிளாடி பாஸ்கர் , உன்னால தான் எங்கப்பாட்ட தினம் திட்டு வாங்குறேன் . பாஸ்கர் பாரு பொறுப்பா இருக்கான் , பருப்பா இருக்கானு ...
உனக்கு சப்போர்ட் பண்ண வந்தேன் பாரு சீனு எனக்கு வேணும் டா நல்லா !
சரி டா டைம் ஆச்சு , நா கிளம்பறேன் .
இரு சீனு நானும் உன்கூட வரேன் , உங்க அப்பாகிட்ட பேசணும் ..
என்ன விஷயம் டா ?
பூந்தமல்லில ஏதோ வேல இருக்குனு ...
சாரி பாஸ்கர் மறந்தே போய்ட்டேன் , எனக்கு அவசரமா ஒரு சின்ன வேல இருக்கு நீ எங்கப்பாட்ட பேசிக்கோ
சரி டா பை .. கேரி ஆன் .
காட்சி - 3 ( ரகுபதி வீடு )
ரேணுகா , பாத்தியா இந்த பாஸ்கர ... 8 மணிக்குவேலைல இருக்கனும்னா "நா சீக்கிரமே ஏந்து பஸ்ல போயிருவேங்கிரான்" .. அது பொழைக்குற புள்ள !
சும்மா பாஸ்கரோட சீனுவை கம்பேர் பண்ணாதீங்க !
பொதுவா சொல்றேன் டி !
ம்ம்க்கும்
நா இன்டெர்-மீடியட் முடுச்சுட்டு "தாண்டவ செட்டியார்" கிட்ட கணக்கு புள்ளையா சேர்ந்தேன் ... இருந்தாலும் கடைல ஆள் இல்லாதப்போ பொட்டலம் போடுவேன் , அதுக்கே நாலு பேரு முன்னாடி "என்னையா மடிக்குற" னு கத்துவாரு ... அப்புடியே சில வருஷம் ஓட்டி , டைப்பு ரைட்டிங் முடிச்சு , பேங்க் வேலைல சேர்ந்தேன் ...
இப்போ அப்பிடிலாம் முடியுமாங்க ?
நா என்ன அப்புடியா செய்யச்சொல்றேன் ? , ஒரு இலக்கு வேணும்லயா ... , சொல்ல மறந்துட்டேன் உம்புள்ள எப்போவேனா மாலையும் கழுத்துமா வந்து நிக்கலாம் !
என்னங்க சொல்லறீங்க ??
ஆமாம் , அவன் "மேகா" கூட சுத்திகிட்டு இருக்கான் !
ஓஹ் ! உங்க பிரெண்டோட பொண்ணு நம்ம சீனு கூட சுத்தறாளா !!
போடி .. போ .
காட்சி-4 ( வீடு )
சில வாரங்களுக்கு பிறகு ...
சீனு நீ கோவப்பட்டாலும் பரவால்ல இன்னிக்கு சில விஷயம் பேசித்திதான் தீரப்போறேன்.
சரி...
எப்போ கல்யாணம்பண்ணிக்கபோற ? பொண்ணு "மேகா"தானா இல்ல நீங்க ஜஸ்ட் பிரெண்ட்ஸ் ஆஹ் ?
மேகா தான் பா , நீங்களே கேட்டதால சொல்லிடறேன் நா ஒரு ஏஜென்ட் மூலமா கவர்ன்மெண்ட் ஜாப் ட்ரை பண்ணபோறேன் , நீங்க ஜஸ்ட் பணம் குடுங்க போதும் , அதும் கடனா ..சம்பாரிச்சு அடைச்சுடறேன் .
நா பணம் தரமாட்டேன்னு சொன்னா ?
யூ.பி.எஸ்.சி கோர்ஸ் சேர்ந்து படிக்கபோறேன் ...
ஏன் ஏதாச்சும் "கௌதம்" படம் பாத்தீயா? , இப்பொல்லாம் அரசாங்க வேல அவோலோ சுலபம் இல்ல "காஸ்ட்" பீலிங்ஸ் ஜாஸ்தி , அதும் நம்ம ஆளுங்கனா சுத்தம் ! இப்போ பென்ஷன் கூட கிடையாது , உனக்கே தெரியும்ல "கலியமூர்த்தி" என்ன எப்பிடிலாம் டார்ச்சர் பண்ணினான்னு ...? , நீ வேணா Tally இல்லனா GST-ERP சாப்ட்வேர்க்கு லைசென்ஸ் வாங்க ட்ரை பண்ணு , ட்ரைனிங் சென்டர் ஆரமி அப்போ நா பணம் தரேன் !.
இல்லப்பா , நா ஒரு நிலையான வேலைல இருக்கணும்னு உங்க பிரென்ட் சொல்லிட்டாரு .. இல்லனா பொண்ணு தரமாட்டாராம் !
சீனு உனக்கு வேவரிங் மைன்ட் ஜாஸ்தி டா , 12 ல பயோ குரூப் கேட்ட , கடைசில காமெர்ஸ் சேர்ந்த .. நீ பி.காம் முடிச்ச காலேஜ்லயே வேலைக்கு சேந்த SLET-NET எழுதபோறேன், ப்ரொபசர் ஆகபோறேன்னு சொன்ன ... அந்தவேளையும்விட்டுட்டு இப்போ ஐ.ஏ.எஸ் னு வந்து நிக்கற .
இல்ல பா , நா தெளிவாத்தான் இருக்கேன் காசு குடு இல்லாட்டி பைக்கை வித்துக்கறேன்.
எப்பா பெரிய மனுஷா உனக்கு இப்போ 25 அரை வயசு நினைப்பு வெச்சிகோ .. நாளையமறுநாள் காசு தரேன்.
தேங்க்ஸ் !
காட்சி- 5 ( வீடு )
சீனு எவளோ சீரியசா படிக்கிறான் தெரியுமாங்க !?
அவன் புதுசா சிகரெட் பிடிக்க ஆரமிச்சுருக்கான் , அது தெரியுமா உனக்கு?!
அடபோங்க! , வேற வேலையே இல்ல உங்களுக்கு..
அப்பா-அம்மா நில்லுங்க என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க .
என்னடா ரிஜிஸ்டர் மேரேஜ் ஆஹ் ?
அப்பா இன்னிக்கு IAS ப்ரீலிமரி எக்ஸாம்ஸ்..
சரிப்பா போய்ட்டு வா .
நல்லா எழுதி கலெக்டர் ஆகணும் , பஸ்டு மார்க் வாங்கணும்
தாங்க்ஸ் மா .
(சீனு சென்ற பிறகு )
அவன் என்ன எக்ஸாம் எழுதப்போறன் , அதுக்கு எவ்ளோ போட்டி தெரியுமா ? உன்புள்ள படிச்சே நா பாக்கலேயே ..
அட போங்க , உள்ள தோச தீயுது .
காட்சி- 6
3 ஆண்டுகளுக்கு பிறகு
மேகா சீக்கிரம் வா , உனக்கு 9 மணிக்கு லாகின்.
இதோ வரேன்.
அங்கிள் உங்களுக்கும் , ஆன்டிக்கும் ஹாட் பாக்ஸ்ல டிபன் வெச்சுருக்கேன் , காபி பிளாஸ்க்ல இருக்கு.
ஓகே மேகா ஸீயூ.
ஆண்ட்டி தூங்கியேந்தப்பறம் சொல்லுங்க
ஓகே மா ..
அப்பா ... உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் ..
சொல்லு சீனு.
இந்த வேல எனக்குப்பிடிக்கல... , ரிசைன் பண்ணிட்டு பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன்.
அதான பாத்தேன் 1 1/2 வருஷமா ஒழுங்கா போறியேன்னு ..!
இல்லப்பா ...
பேசாத டா ...உன்ன ..
அப்பா ... கூல் சும்மா உங்கள வெறுப்பேத்தத்தான் சொன்னேன் ... பை ..
என்ன விளையாட்டு சீனு இது ..
அப்பாட்ட திட்டு வாங்கி ரொம்பநாள் ஆச்சுல்ல அதான்.
( வீட்டிலிருந்து மேகாவை அவளது அலுவலகத்தில் விட்டுவிட்டு ... நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் காரை நிறுத்திவிட்டு இம்மிகிரேஷன் பிரிவில் சீனு நுழைய ..பலர் அவனனுக்கு வணக்கம் வைத்தனர் )
சுபம்
No comments:
Post a Comment